சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுக முகவர்கள் கவனமுடன், விழிப்புடன் செயல்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் இதில் தனி கவனம் செலுத்தி, அனைத்து பணிகளும் முறையாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.